B/o Krishnamoorthy, Patron
AK24MTCS

கழுகுப் பார்வை கொண்ட உளவுத்துறை அதிகாரி குடியரசுத் தலைவரின் பதக்கத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்கிற விவரம் தினசரி செய்தி தாள்களில் வெளிவந்தன அவர்தான் Directorate of Revenue Intelligence, Coimbatore Regional Unit and Central Excise and Customs தொடர்பான பல்வேறு பணிகளில் 33 ஆண்டுகாலம் சிறப்பாக பணிபுரிந்து சிறப்பான செயல்பாடுகளை வழங்கி Senior Intelligence Officer ஆக ஒய்வு பெற்ற திரு. NTPA. சண்முகராஜ் அவர்கள்.
இவர் நம் சமூகத்தின் அடையாளமாக, திகழ்ந்த ஒருவரும், ஆன்மீகம்- சமூகம், நம் இனம் கல்வி, விழையாட்டு ஆகியவற்றில் அதிகபட்ச ஈடுபாடு கொண்டவருமான,தெய்வத்திரு. NTP ஆறுமுகம் செட்டியார் அவர்களின் குமாரர் என்பதும், சுண்டக்காமுத்தூரில் ஒரு தெருவின் பெயர் NTP வீதி என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவரது நேர்மை, நம்பகத்தன்மை, அர்ப்பணிப்பு மற்றும் அறிவு போன்ற நற்குணங்களையும், அவரது சிறப்பான பணியையும் பாராட்டி மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்கள் 2020-ல் சிறப்பான சேவைப் பதிவுக்கான பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவப்படுத்தியுள்ளார். சுண்டக்காமுத்தூரை சேர்ந்த இவர்,
தற்பொழுது 24 மனை தெலுங்கு செட்டியார்கள் மகாஜன சங்கம் தலைவராக சேவை செய்து வருகிறார். இவருக்கு கிடைத்த விருது நம் இனத்திற்கும் நம் நாட்டிற்கும் கிடைத்த பெருமையாக கருதுகிறோம்.
தொகுப்பு: கி.கிருஷ்ணமூர்த்தி